Thursday, December 30, 2010

Manam andrum indrum

மத்தாப்புகளின் பூச் சிதறல்களைக் கண்டு மகிழ்ந்தது என் மனம் அன்று ,
கைச் சுட்டு விடுமோ என்று அஞ்சுகிறது இன்று. .
கண்ணாடித் துண்டை கூட வைரமாய் எண்ணி மகிழ்ந்தது அன்று
வைரமே ஆனாலும் குறை காண்கிறது இன்று .
கடற்கரை ஓரத்தில் உள்ள சிப்பிகளை ரசித்தது அன்று....
இப்போதோ பேரலையை எண்ணி அஞ்சுகிறது,
கோயிலுக்கு செல்லும் போது அழகாய் வணங்க தோன்றியது அன்று..
சந்தேகங்கள் பல கொண்டு உழல்கிறது இன்று ,
நண்பர்களைக் கண்டதும் குதூகலித்தது அன்று
இன்றோ எதிரிகளையே நம்பி விடலாம் என்று விழைகிறது
கோபத்தை நொடியில் மறந்தது அன்று..
அடைக்காத்து பெரிதாக்குகிறது இன்று .
சொன்னதை சொன்னப்படிக் காண முடிந்தது அன்று ..
அதன் உள் அர்த்தங்களை காண விழைகிறது இன்று.
அனுபவம் நிறைய தான் கற்று கொடுத்திருக்கிறது
கள்ளமில்லா மனதையும் மகிழ்ச்சியையும் அழித்துவிட்டு ....

No comments: