Thursday, December 30, 2010

வாழ்க்கையே போராட்டம் என்பர் பலர் ,
ஆனால் போரட்டமே வாழ்க்கை என்பேன் நான் .
ஆசைகள் பல நெஞ்சில் வைத்து சொல்ல துடிக்க எண்ணும் போது
வார்த்தைகள் வெளிவராமல் செய்யும் வார்த்தைகளின் போராட்டம் .
எண்ணங்கள் பல நெஞ்சில் கொண்டு எழுத எத்தனிக்கும் போது
அதை வடிவமைக்க முடியாமல் தவிக்கும் எண்ணங்களின் போராட்டம்
லட்சியங்கள் பல மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும்
சாதிக்க நினைக்க அவையாவும் ஈடேறாமல் தடைகள் வர
ஏம்மாற்றதுடன் நிற்கும் இலட்சியங்களின் போராட்டம் .
அன்பினை மனதில் கொண்டு ஆசையாய் பழகி வந்து
தோள்கொடுப்பான் நண்பன் என்று திரும்புகையில்
வஞ்சனையாய் முகத்தை திருப்பி செல்லும்போது
ஏற்படும் எண்ணங்களின் ,மனதின் போராட்டம் .....
ஊட்டி வளர்த்த பிள்ளைகள் ,தம் கனவுகளை தேடி
நம்மை விட்டு வெகுதொலைவில் செல்லும் போது
எற்படும் மனதின் வேதனையான போராட்டம் .
வாழ்க்கையில் நாம் அன்பு செலுத்திய , நம்மேல் அன்பு கொண்ட பலர்
நம்மை விட்டு நிரந்தரமாய் பிரியும் போது எற்படும்
தனிமை ,கலக்கம் இவைளிருந்து மீண்டு
திரும்பி வாழ்வதும் ஒரு போராட்டமே .. .
உண்மையாய் வாழ விரும்பும் போது
இதுவே யதார்த்தம் என்று சந்தர்பமும் சூழ்நிலையும்
நமக்கு சவால் விடும் போது
நாம் திடமாய் நிற்க போராட்டம் .
கடவுள் நம்பிக்கை கொண்டு கோயில்லில் வணங்கும் போது
கருத்துகள் பலவற்றை ஏற்கவும் முடியாமல் விடவும் முடியாமல்
நெஞ்சில் வடிவுறும் போராட்டம் பல ...
வயதும் ஏறி உடலில் வேதனையும் வந்து
அனைவர்க்கும் பாரமாய் நின்று நாம்
ஒன்றும் செய்ய முடியாமல் கலங்கி பார்க்கும் போது
எற்படும் வலியும் வேதனையும் முதுமையும் ஒரு போராட்டமே .....
இவ்வளவு போராட்டங்கள் நிறைந்த போர்களமே வாழ்க்கை......
ஆனால் ஒன்றுமே நினையாமல் பிறருக்காகவே வாழ்ந்து
தன்னலமின்றி அனைவருக்காக நம்மை தந்தால்
இந்த போரட்டத்தில் நமக்கு சிறு வெற்றி .........

No comments: